Sunday, September 11, 2011

1951-ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட பூ.சா.கோ தொழில்நுட்பக்கல்லூரி,
தற்போது ‘’வைர விழா’’ஆண்டினைச் சிறப்பாகக் கொண்டாடும், வகையில்,
பூ.சா.கோ முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக ‘’ TECHEX 2011’’ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியினை, நவம்பர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை,கோவை கொடீசியா வளாகத்தில் நடத்த உள்ளது.
இக்கண்காட்சியானது, பூ.சா.கோ.முன்னாள் மாணவர்களின், உற்பத்திப் பொருட்களின்,மூன்றாவது கண்காட்சியாகும்.
இக்கண்காட்சியின் முக்கிய நோக்கம்[ TECHEX 2011] ,பூ.சா.கோ.தொழில் நுட்பக்கல்லூரி,பல்தொழில் நுட்பக்கல்லூரி, மற்றும்,மேலாண்மைக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களின், சாதனைகளை, உலகிற்க்கு பறைசாற்றுவதற்காகவும்,தொழில் வல்லுநர்கள், மாணவர்கள்,மற்றும், விற்பனையாளர்களை ஊக்குவிப்பதற்க்காகவும், நடத்தப்பட உள்ளது
கண்காட்சியாளர்கள்:
பூ.சா.கோ.தொழிநுட்ப, பல்தொழிநுட்ப,மேலாண்மை கல்லூரியின் முன்னாள்
மாணவர்களும் தற்போதைய உற்பத்தியாளர்கள்,ஆலோசகர்கள்,வணிக ஏற்றுமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இக்கண்காட்சியில் தங்களது உற்பத்திப்பொருட்களை, பார்வைக்கு வைக்கலாம். இக்கண்காட்சியில் இயந்திரவியல்,மின்னியல்,மின்னணுவியல்,கணிணியியல்,துகிலியல், மற்றும், அனைத்து துறை சார்ந்த பொருட்களும் ,காட்சியில் அடங்கும்.

பார்வையாளர்கள் ;
புதிய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள்,
சிறு,பெரு,வியாபார நிறுவன உரிமையாளர்கள்,மற்றும்,பொறியாளர்கள்,
கைத்தொழிலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒப்பந்ததாரர்கள்,
ஏற்றுமதியாளர்கள்,விநியோகஸ்தர்கள்,கல்வியாளர்கள்,பத்திரிக்கையாளர்கள்,
மற்றும்,மாணவர்கள் .

அரசு நிறுவனங்களின் பங்களிப்பு ;
1- Technology Development Board (TDB),Department of Science & Technology (DST),Government of India, New Delhi
2- Technopreneur Promotion Programme(TePP),Department of Scientific & Industrial Reserch (DSIR),Government of India, New Delhi
3- Technology Refinement & Marketing Programme (TREMAP).Technology Information Forcasting and Assessment Council (TIFAC),Department of Science & Technology, Government of India.

மேற்கண்ட அரசு சார்ந்த நிறுவனங்கள், இக்கண்காட்சியில் ஆய்வரங்கங்கள், நடத்த உள்ளது .

சுய தொழில் முனைவோருக்கான வணிக ஆய்வரங்கம் ;
நவம்பர் 26 ஆம் தேதியன்று ’’ சுயதொழில் முனைவோருக்கான உதவி’’ எனும் தலைப்பில் ,ஆய்வரங்கம் ஒன்றை ‘’TECHEX-2011’’ கண்காட்சியில் ‘’PSG-STEP’’ நடத்த உள்ளது.

நேரம் ;
தொழிநூட்ப பார்வையாளர்கள்-------காலை 9.30 முதல் பகல் 12.00 வரை,
அனைத்துப் பார்வையாளர்கள்---------பகல் 12.30 முதல் மாலை 6.30 வரை,

அனுமதி இலவசம்.


TECHEX 2011 கண்காட்சியானது, 350 க்கும் மேற்பட்ட அரங்குகளுடன்,அமெரிக்கா,
கனடா,சிங்கப்பூர்,மலேசியா, வாழ் , பூ.சா.கோ.முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.

ரா.பழனிச்சாமி,
தலைவர்- TECHEX-2011

Wednesday, September 7, 2011

Kavinnarai Kanndu Pidi For Tamil Mandram

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன் .
என்னை அவனே தானறிவான் .
-Kanna Dasan
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
-Bharathi
சேரிகளில் மட்டுமே,,,,நீ!
யாத்திரை செய்வாய்,என்பதை
தெரிந்து கொண்டதால்,,,,,,,!
உன்னை நேசித்தவர்கள்,,,,,,,,,
தேசத்தையே,
சேரியாக மாற்றிவிட்டார்கள்..!
-metha

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்,எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
-Bharathidasan

ஒவ்வொருமுறை சிரிக்கும் போதும்
இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது,,,,,,,,,
சிரித்துச் சிந்தும் கண்ணீரில்,,,,,,
உப்புச்சுவை தெரிவதில்லை …!
Vairamuthu

மங்கையராகப் பிறப்பதற்கே,
நல்ல மாதவம், செய்திட
வேண்டுமம்மா,,,!
Desiya Vinaygam PIllai

எழுதப் படிக்கத் தெரியாத எத்துணையோ பேர்களில - எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான் !
Vaali

ஐந்தாண்டுக்கு ஒரு முறை
சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையோடு,
-குருட்டு தமயந்தி-.
abdul Rahman

போர்ப் படைதனில்
தூங்கியவன் வெற்றியிழந்தான்
உயர்பள்ளியில்
தூங்கியவன் கல்வியிழந்தான்
கடைதனில்
தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்டகடமையில்
தூங்கியவன் புகழ் இழந்தான்
-pattu kotai kalyanasundaram

நான் நிரந்தரமானவன்…!
அழிவதில்லை..!
எந்த நிலையிலும் ,எனக்கு,
மரணமில்லை,,,,,,,,
kanna dasan

ஒரு மூங்கிற்காட்டையே அழித்து ஒரே ஒருபுல்லாங்குழல் செய்தேன்… ஊதும்போதுதான் அது ஊமைமென்று தெரிந்தது உன்னைப் போலவே.
meatha

Tamil Mandaram

1. வெள்ளி பனி மலையின் மீதுலாவுவோம்,,!
அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் !
{ மேலைக் கடல் மலையின் மீதுலாவுவோம்,,
வெள்ளி பனி அடி முழுதும் விடுவோம் கப்பல்}
2.பார்க்கும் இடத்திலெல்லாம்,நந்தலாலா,
உந்தன் பச்சை நிறம் தெரியுதையே ! நந்தலாலா !
[ பச்சை இடத்திலெல்லாம், நந்தலாலா,
உந்தன் பார்க்கும் நிறம் தெரியுதையே ! நந்தலாலா !
3.தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்,
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே
[தெக்கணமும் பிறைநுதலும் திராவிட நல் திலகமுமே
தக்க சிறு அதில் சிறந்த தரித்த திருநாடும்]
4.யாயும் யாயும் யாராகியரோ?
எந்தையும், நுந்தையும், எம்முறை கேளீர்.
[ யாயும் எந்தையும் யாராகியரோ?
நுந்தையும் யாயும், எம்முறை கேளீர்.]
5.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
[அப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள்
எப்பொருள் காண்ப தறிவு.]

6.நீலத்திரை கடலோரத்திலே, நின்று
நித்தம் தவம் செயும் குமரி அன்னை
[ குமரி கடலோரத்திலே, நித்தம்
நின்று தவம் செயும் அன்னைநீலத்திரை]
7.கோவில் முழுதும் கண்டேன்,
உயர் கோபுரம் ஏறிக்கண்டேன்,
தேவாதி தேவனை நான்,
தேடி எங்கும் கண்டிலனே !
[தேவாதி தேவனை முழுதும் கண்டேன்,
உயர் கோவில் ஏறிக்கண்டேன்
கோபுரம் தேடி நான்
எங்கும் கண்டிலனே !
8.கற்கை நன்றே,கற்கை நன்றே,
பிச்சை புகினும் கற்கை நன்றே
[கற்கை நன்றே,பிச்சை நன்றே
கற்கை புகினும் கற்கை நன்றே]
9.உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுவார்தம்
உறவு கலவாமை வேண்டும்.
[புறமொன்று வைத்து, உறவு பேசுவார்தம்
உள்ளொன்று கலவாமை வேண்டும்]

10.நல்லதோர் வீணைசெய்தே ,அதை
நலங்கெட புழுதியில் எறிவருண்டோ? சொல்லடி சிவசக்தி
[நலங்கெட வீணைசெய்தே,அதை
நல்லதோர் எறிவருண்டோ? புழுதியில் சொல்லடி சிவசக்தி]